அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…

மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!…

மோடிக்கு புகழாரம் சூட்டிய ஒபாமா!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழின் கட்டுரை ஒன்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெகுவாக பாரட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியுள்ளார். இந்தியாவின் தலைமை சீர்திருத்தவாதி என்ற தலைப்பில் ஒபாமா எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி சிறுவனாக இருந்த போது தனது தந்தையுடன் இணைந்து தேநீர் விற்று குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தார். இன்று, உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். வறுமையில் தொடங்கி பிரதமராகியுள்ள அவரது வாழ்க்கை கதை இந்தியாவின் எழுச்சியையும் திறனையும் பிரதிபலிக்கிறது. தனது பாதையை பின்பற்றி மேலும் இந்தியர்களுக்கு உதவ அவர் முடிவு செய்துள்ளார். தீவிரமாக உள்ள வறுமையை குறைக்க லட்சிய பார்வையை தீட்டியுள்ளார்.

இந்தியாவைப்போன்று, அவர் நவீனத்தையும், பழமையையும் கடந்து செல்கிறார். யோகா பயிற்சி செய்கிற அவர் இந்திய மக்களுடன் டிவிட்டரில் தொடர்பு கொள்கிறார். டிஜிட்டல் இந்தியாவை கற்பனை செய்கிறார்.அவர் வாஷிங்டன் வந்த போது, அவரும், நானும் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவு சின்னத்துக்கு சென்றிருந்தோம். மார்ட்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி ஆகியோரின் போதனைகளை பிரதிபலித்தோம். எங்கள் நாடுகளில் உள்ள பன்பமுகத்தன்மை பின்னணி, மத நம்பிக்கை எப்படி போற்றிப் பாதுகாக்கத்தக்க வலிமை வாய்ந்தவை என்பதை விவாதித்தோம். 100 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்கள் இணைந்து வாழுவதை உலகத்திற்கு ஊக்கம் தரத்தக்க முன்மாதிரி என்று பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி