செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு தர வரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் சாய்னா நேவால்!…

தர வரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் சாய்னா நேவால்!…

தர வரிசை பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் சாய்னா நேவால்!… post thumbnail image
துபாய்:-உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள புதிய தர வரிசை பட்டியலின் படி 80191 புள்ளிகள் பெற்று சாய்னா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த படியாக 2வது இடத்தை ஸ்பெயின் கரோலினா மெரைனும், 3வது இடத்தை லீ க்சுய்ரய் பிடித்துள்ளனர்.

முன்னதாக இந்திய ஓபன் போட்டியில் பட்டம் வென்றதால், முதலிடத்தை பிடித்த சானியா ஒரே வாரத்தில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தோல்வியடைந்ததால் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். தற்போது ஒரே வாரத்தில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். காயமடைந்து ஓய்வில் இருந்து வரும் சிந்து 9வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதே போல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடம்பி ஸ்ரீகாந்த் தொடர்ந்து 4வது இடத்திலேயே உள்ளார்.

கடந்த வாரம் 15வது இடத்திலிருந்த பருபாலி காஷ்யப், ஒரு இடம் முன்னேறி 14வது இடத்தை பிடித்தார். பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி 18வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி