செய்திகள் செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது!…

செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது!…

செல்போன் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது!… post thumbnail image
பெய்ஜிங்:-சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12). இவனது தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்டனர். இவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். அப்போது தனது செல்போனை ‘சார்ஜ்’ செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அவனுக்கு டெலிபோன் கால் வந்தது. எனவே, ‘சார்ஜர்’ சுவிட்சை ‘ஆப்’ செய்யாமல் அப்படியே தனது காதில் வைத்து பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதனால் அவனது காதில் இருந்து ரத்தம் கொட்டியது. அவனது கன்னத்தின் சதைகள் கிழிந்து தொங்கின. தாடை எலும்பு உடைந்து நொறுங்கியது. இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுவனின் பெற்றோர் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. பேட்டரி பழுது காரணமாகவும் அல்லது சரிவர ‘சார்ஜ்’ செய்யாததாலும் வெடித்து சிதறி இருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி