செய்திகள்,திரையுலகம் தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…

தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!…

தாக்குப்பிடிக்க முடியாத நடிகை காஜல்அகர்வால்!… post thumbnail image
சென்னை:-தமிழில் விஜய்யுடன் கத்தி, ஜில்லா படங்களில் நடித்து வந்தபோது அடுத்தபடியாக அஜித்தின் படத்தையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான் காஜல் அகர்வாலின் டார்கெட்டாக இருந்தது. அதன்காரணமாகவே இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் இருந்தும் தமிழில் புதிய படங்களில் கமிட்டானார். முக்கியமாக, தனது வழக்கமான சம்பளத்தை குறைத்துகூட தனுஷின் மாரியில் ஒப்பந்தமான காஜல், அஜித் போன்ற மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் கிடைத்தால் மேலும் சம்பளத்தை தள்ளுபடி செய்து நடிப்பதற்கும் தயாராக இருந்தார்.

அதோடு, சில அபிமானிகள் மூலம் கடும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். ஆனால், ஒரு பக்கம் சமந்தா, இன்னொரு பக்கம் ஸ்ருதிஹாசன் என மேற்படி நடிகைகள் இருவரது அதிரடி தாக்குதலுக்கு முன்பு காஜலினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. முக்கியமாக புலி படத்தில் விஜய்யுடன் நடிக்க முடியாமல் பின்வாங்கியவர் அடுத்து அஜித்தின் புதிய படத்துக்கு தமன்னா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என பலரும் முண்டியடிக்க, தானும் அதிரடியாக முயற்சிகள் எடுத்தார்.

இருப்பினும், ஸ்ருதிஹாசனுக்கே இறுதியில் வெற்றி கிடைத்தது. அதனால் சோர்ந்து விட்டார் காஜல்அகர்வால். ஆனபோதும், சினிமாவில் நேரம் காலம் ரொம்ப முக்கியம் என்பதால், இப்போது கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டே தனது இலக்குகளை அடைய அமைதியான முறையில் அடுத்த கட்ட முயற்சிகளை எடுக்கப்போகிறாராம் காஜல்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி