செய்திகள் கழிவறையில் மோசமான நாற்றம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!…

கழிவறையில் மோசமான நாற்றம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!…

கழிவறையில் மோசமான நாற்றம்: கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!… post thumbnail image
டோக்கியோ:-டோக்கியோவில் வசிக்கும் 29 வயதான எமி மாமியாவின் கணவர், மலம் கழித்துவிட்டு வெளியே வந்தார். அதன் பின் தனது 3 வயது மகனை கழிவறைக்கு அழைத்து சென்றார் எமி. அப்போது கழிவறையில் இருந்து மோசமான நாற்றம் வீச தொடங்கியதை கண்டு அதிர்ச்சியுற்றார். கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ளாத கணவரை கண்டு ஆத்திரமடைந்த அவர், சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து கணவரின் முகத்தை கத்தியால் கிழித்தார்.

இது பற்றி தகவலறிந்த ஜப்பான் போலீசார் எமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கழிவறையை சுத்தமாக வைக்காததுடன், கையை கூட சரியாக கழுவாமல் குழந்தையை தூக்கியதால் கணவரின் முகத்தை கத்தியால் கிழித்ததாக போலீசாரிடம் எமி வாக்குமூலம் அளித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி