செய்திகள் தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!…

தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!…

தந்தை, மாமன், சகோதரனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம்பெண்!… post thumbnail image
ஜல்பைகுரி:-மேற்குவங்க மாநிலத்தில் உள்ள துப்கவுரி போலீஸ் நிலையத்தில் 16 வயது இளம் பெண் அளித்துள்ள புகார், மனிதர்களால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ள முடியுமா?… என்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளது. அவர் அளித்துள்ள புகாரில், தந்தை, தாய்மாமன் மற்றும் சகோதரன் என மூவரும் கடந்த 2 வருடங்களாக தன்னை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், இதில் 2 முறை கர்ப்பமடைந்து அதை கலைத்துவிட்டதாகவும், மன உளைச்சல் தாங்க முடியாமல் 4 முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார்.

இந்தக் கொடுமையின் உச்சம் என்னவென்றால், முதன் முதலாக தன் குடும்பத்தினராலே சீரழிக்கப்பட்டதை தன் தாயிடம் சொல்லி அந்தப் பெண் கதறி அழும் போது, அவர்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை, உன் உறவினர்கள் என்று அந்தப் பெண்ணுக்கு சமாதானம் சொல்லியுள்ளார் அந்த விசித்திர தாய். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று தனது பள்ளி ஆசிரியர்களில் ஒருவரிடம் தான் அனுபவிக்கும் கொடூரத்தை அப்பெண் கூற, பதறிப்போன அப்பள்ளியின் ஆசிரியர்கள் வெள்ளியன்று அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அளித்த புகாரின் பேரில், அந்த 3 கொடூரன்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த அந்தப் பெண்ணின் தாயார் தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை சிறார் நல கமிட்டியிடம் ஒப்படைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி