செய்திகள்,திரையுலகம் ஆழ்ந்த சோகத்தில் நடிகர் விஜய்!…

ஆழ்ந்த சோகத்தில் நடிகர் விஜய்!…

ஆழ்ந்த சோகத்தில் நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் யாருக்கு எந்த கஷ்டம் என்று தெரிந்தால் உடனே ஓடி உதவ கூடியவர். இவர் தற்போது நடித்து வரும் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படமாக்கப் பட்டன.

அதே நாளில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் என் கவுன்ட்டரில் தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளர்கள் 20 பேர் பலியாயினர். அன்றைய தினம் மாலை படப்பிடிப்பை முடித்து கொண்டு திருப்பதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த படப்படிப்பு குழுவினர், தலகோனா பகுதி உட்பட பல இடங்களில் தீவிர வாகன சோதனை நடப்பதை அறிந்து விசாரித்தனர். அப்போது படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் என்கவுன்ட்டர் நடந்தது தெரியவந்தது. இதை அறிந்த விஜய் மிகவும் மன வேதனை அடைந்துள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி