செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…

நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!…

நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல்: 24 பேர் பலி!… post thumbnail image
மைதுகுரி:-ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போக்கோ அராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி 24 பேர்களைக் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவத்திலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள க்வாஜபா கிராமத்திற்கு, மதபோதனை செய்ய இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு, நேற்று முன்தினம் (4-ம் தேதி) நள்ளிரவு காரில் வந்திறங்கிய போகோ அராம் தீவிரவாதிகள், மசூதிக்கு அருகே கூடியிருந்த மக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் தீ வைத்து கொளுத்தியதாகவும், அக்கிராமவாசிகளில் ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் குண்டடி பட்டு படுகாயமடைந்தவர்கள் போர்னோ மாகாணத்தில் உள்ள மருத்துவன்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி