செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…

ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!…

ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும்: யுவராஜ் சிங்கின் தந்தை தாக்கு!… post thumbnail image
புதுடெல்லி:-உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக டோனி யுவராஜை அணியில் சேர்த்து கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி மீது யுவராஜின் தந்தை யோக்ராஜ் சிங் கடுமையாக குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு யுவராஜ் ஒவ்வொரு பெற்றோரையும் போல என் தந்தையும்.உணர்ச்சிவசபடுகிறார். நான் கண்டிப்பாக மகியின் – (மகேந்திர சிங் டோனி) தலைமையில் மகிழ்ச்சியுடன் விளையாடினேன் எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வேன் என கூறி இருந்தார்.

இந்நிலையில் உலக கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. தற்போது இந்தி டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் டோனியை வசைபாடி உள்ளார். அவர் அளித்த பேட்டியில் டோனி திறமையற்றவர். மீடியாக்கள்தான் அவரை கிரிக்கெட்டின் கடவுளாக மாற்றி வைத்துள்ளன. அதற்கான எந்த தகுதியும் டோனிக்கு கிடையாது. ஒன்றுமில்லாமல் இருந்த டோனியை தூக்கி வைத்த மீடியாக்களையும் டோனி தற்போது மதிப்பதில்லை, அவருக்காக கை தட்டிய இந்திய ரசிகர்களையும் அவர் மதிப்பதில்லை. எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், நான் மட்டும் ஒரு பத்திரிகையாளராக இருந்திருந்தால், சிரித்த டோனியை அதே இடத்தில் அடித்திருப்பேன். டோனி அகங்காரம் மிக்கவர். ராவணன் எப்படி அகங்காரத்தில் இருந்து வீழ்ந்தானோ, அதேபோல, டோனியும் ஒருநாள் வீழ்வார். டோனியை பற்றி பிற வீரர்கள் சொல்லும்போதெல்லாம் நான் நம்பவில்லை. ஆனால், கொஞ்ச நாட்கள் கழித்துதான் நானே உணர்ந்து கொண்டேன். 2011 உலக கோப்பை இறுதி போட்டியில், யுவராஜ்சிங் களமிறங்க வேண்டிய நேரத்தில், டோனி 4வதாக களமிறங்கி, தன்னை ஹீரோவாக காண்பித்தார். ஏன், இந்த உலக கோப்பை செமி பைனலில் டோனி 4வதாக இறங்கவில்லை. ஏன் 6 வதாகவே களமிறங்கினார். ஒருநாள் இல்லை, ஒருநாள் டோனி பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும், அன்று அவருக்காக யாருமே உதவிக்கு வரமாட்டார்கள். இவ்வாறு யோக்ராஜ்சிங் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி