செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் விமானியை தாக்கிய இணை விமானி!…

ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் விமானியை தாக்கிய இணை விமானி!…

ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் விமானியை தாக்கிய இணை விமானி!… post thumbnail image
புதுடெல்லி:-நேற்று மாலை ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானிக்கும், இணை விமானிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இணை விமானி மிகவும் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், விமானியை அவர் அடித்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் மட்டுமே நடைபெற்றதாகவும், அதற்கு மேல் காக்பிட்டுக்குள் எதுவும் நிகழவில்லை என ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் இருவருக்கும் இடையேயான மோதலை பலரும் நேரில் கண்டுள்ளனர். விமானம் புறப்படுவதற்கு முன், டேக் ஆப் செய்வதற்கு முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்களை குறிப்பெடுக்குமாறு விமானி இணை விமானியிடம் கூறியுள்ளார், அதாவது விமானத்தில் எத்தனை பயணிகள் உள்ளனர், டேக் ஆப் செய்யும்போது விமானத்தின் எடை மற்றும் எரிபொருள் இருப்பு குறித்து விமானியின் இருக்கைக்கு முன் இருக்கும் காகித அட்டையில் எழுதி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.

விமானியின் இந்த உத்தரவால் அதிருப்தியடைந்த இணை விமானி, விமானியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த விரும்பாத விமானி, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விமானத்தை டேக் ஆப் செய்து டெல்லிக்கு பறந்து சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி