புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, சிறு வயதிலிருந்தே தனது நண்பராக விளங்கிய பிரியங்கா சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இந்திய நேரப்படி அதிகாலை 1:12 மணியளவில் இருவருரின் திருமணமும் கோலாகலாமாக நடைபெற்றது. இத்திருமண விழாவிற்கு பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, அவரது மனைவி சாக்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவுடன் இணைந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவெய்ன் பிராவோ மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய அணியின் விராத் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்டார். இவர்கள் தவிர இந்திய அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். திருமணத்தை முன்னிட்டு ரெய்னாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி