அந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் சிறிசேனா நாளை (5–ந்தேதி) பாகிஸ்தான் செல்கிறார். அங்கு வருகிற 7–ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு நாளை செல்லும் சிறிசேனா அந்நாட்டு ஜனாதிபதி மமனூன் உசேனை சந்திக்கிறார்.
சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் நவாஸ்செரீப்பை சந்திக்கிறார். அப்போது இருவரும் அலுவலக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சிறிசேனாவுடன் பாகிஸ்தான் பாராளுமன்ற சபாநாயகர், மூத்த மந்திரிகள் ஆகியோரும் சந்திக்கின்றனர். பாகிஸ்தானும், இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றாகும். ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் இருநாடுகளும் மிகவும் நெருக்கமாக உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி