செய்திகள்,திரையுலகம் 20 வருடம் கழித்து மோகன்லால் – பிரபு இணையும் ‘புலி முருகன்’!…

20 வருடம் கழித்து மோகன்லால் – பிரபு இணையும் ‘புலி முருகன்’!…

20 வருடம் கழித்து மோகன்லால் – பிரபு இணையும் ‘புலி முருகன்’!… post thumbnail image
சென்னை:-1996ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘காலாபாணி’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெள்ளைக்காரர் ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு அந்தமான சிறைச்சாலைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டு நமது மக்கள் எப்படியெல்லாம் சித்திரவதை அனுபவித்திருப்பார்கள் என்பதை நெஞ்சில் உரைக்கும் விதமாக சொன்ன படம் அது. அந்தமானில் சிக்கிய கைதிகளில் மலையாளியாக மோகன்லாலும், தமிழனாக இளையதிலகம் பிரபுவும் நடித்திருந்தனர்.

சீரியசான படம் என்றாலும் சிறையில் இருந்து இவர்கள் இருவரும் இணைந்து தப்பிக்கும் காட்சிகள் நகைச்சுவையாகவும் அதேசமயம் த்ரில்லிங்காகவும் இருந்தன.தமிழில் இந்தப்படம் சிறைச்சாலை என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கேயும் வரவேற்பை பெற்றது. இந்தப்படம் மூன்று தேசிய விருதுகளையும் பெற்றது. இப்போது கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மோகன்லாலும் பிரபுவும் மீண்டும் ஒரு மலையாளப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இது ஏற்கனவே மோகன்லால் நடிப்பதாக கமிட் ஆகி, மே மாதம் ஷூட்டிங் செல்வதற்காக காத்திருக்கும் ‘புலி முருகன்’ படம் தான். விஷுதன், கஸின்ஸ் ஆகிய படங்களை இயக்கிய விகாஷ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்த புலி முருகன் படத்திற்கு சிபி கே.தாமஸ் – உதயகிருஷ்ணா என்கிற நட்சத்திர எழுத்தாளர் கூட்டணியில் உள்ள உதயகிருஷ்ணா தனியாகவே கதை எழுதுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி