செய்திகள்,திரையுலகம் கொம்பன் படத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய நடிகர் சூர்யா!…

கொம்பன் படத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய நடிகர் சூர்யா!…

கொம்பன் படத்திற்கு ஆதரவு கரம் நீட்டிய நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘கொம்பன்’.ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் ஏப்ரல் 2-ந் தேதி வெளியாவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்திற்கு சாதிய அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் ஒருநாள் முன்னதாகவே இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றமோ இப்படத்தை பார்த்துவிட்டுத்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று கூறியதால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கார்த்தியின் அண்ணனும் நடிகருமான சூர்யாவும் ‘கொம்பன்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கொம்பன் படம் அழகான உறவுகளை பற்றிய படமாக உருவாகி இருக்கிறது. படம் ரிலீசுக்கு முன்னர் இப்படி ஒரு திடீரென உணர்வுப்பூர்வமான நிலை உருவானது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, இந்த பிரச்சினைக்கு முழு ஆதரவு அளித்துள்ள திரையுலக பிரபலங்கள், மீடியாக்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். சென்சார் போர்டு முடிவை ஏற்றுக்கொண்டு, அதற்கு மரியாதை தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொம்பன் படத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் நடிகர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் #isupportkomban என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இன்று ‘கொம்பன்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் ஆணைப்படி படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்படியும், இன்று மாலை இப்படம் வெளியாகிவிடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி