செய்திகள் பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…

பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…

பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!… post thumbnail image
சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் சீதாராமன் ரமேஷ் (வயது 32) என்பவர் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25-ந்தேதி 39 வயது பெண் ஒருவர் பஸ்சில் பயணம் செய்தார். அவர் கடைசி சீட்டுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்து இருந்தார். 20 நிமிடம் பயணத்திற்கு பின் சீதாராமன் அதே பஸ்சில் ஏறினார். அந்த பெண் தனியாக இருந்ததை கவனித்த சீதாராமன் ஒவ்வொரு சீட்டாக மாறி கடைசியில் அந்த பெண் இருந்த சீட்டிற்கு பின் சீட்டில் அமர்ந்தார்.

அதன்பின் அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் சீதாராமனை கண்டித்ததுடன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீதாராமன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் அவருக்கு மூன்று வார ஜெயில் தண்டனை கொடுத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இவர் மீது இதுபோன்று இன்னும் இரண்டு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை, அபராதம் மற்றும் சவுக்கடி கிடைக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி