செய்திகள்,முதன்மை செய்திகள் 9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்!…

9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்!…

9 மணி நேரத்துக்கு மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்!… post thumbnail image
இங்கிலாந்து:-இளம் வயதினர் இரவு 9 மணி நேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர். குறைவாக தூங்குபவர்களை விட அளவுக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கும் உடலுக்கும் உகந்த ஒன்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக 1 கோடி மக்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருநாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் விரைவில் இறப்பதற்கான அபாயம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் குறுகிய நேரம் தூங்குபவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது. அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 12 சதவீதம் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.

அதேவேளையில், நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு, மனஅழுத்தம், இதய பிரச்சினைகள், நீரிழிவு நோய்கள், ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மணிநேரத்திற்கும் மேல் தூங்குபவர்கள் 30 சதவீதம் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறைவாக தூங்குபவர்களுக்கு 12 சதவீதம் விரைவில் மரணம் அடைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று வார்விக் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி