செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை!…

ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை!…

ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை!… post thumbnail image
மெல்பொர்ன்:-உலகக்கோப்பை போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி.-யின் 2015 கனவு உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது. இதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு உள்ளாகவே ஐ.சி.சி.-யின் கனவு உலகக்கோப்பை அணியில் ஒரு இந்திய வீரருக்குக்கூட இடம் இல்லை என்கின்ற மற்றொரு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

இந்த உலகக்கோபை போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களான முகமது சமி, அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர்களின் பெயர்கள் விவாதிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்ட்ராக், நியூசிலாந்து அணியின் போல்ட் மற்றும் வெட்டோரி ஆகியோர் அவர்களை பின்னுக்குத்தள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐ.சி.சி.-யின் கனவு உலகக்கோப்பை அணியின் கேப்டனாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் தேர்வு செய்யபட்டுள்ளார். அவருடன் மார்டின் கப்தில் (நியூசிலாந்து), குமார் சங்ககரா (இலங்கை), ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா), டி வில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), போல்ட் (நியூசிலாந்து), வெட்டோரி (நியூசிலாந்து), மிட்செல் ஸ்ட்ராக் (ஆஸ்திரேலியா) மற்றும் மோர்னே மோர்கல் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 12-வது வீரராக ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி