செய்திகள்,திரையுலகம் பிரபல நடிகை ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்!…

பிரபல நடிகை ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்!…

பிரபல நடிகை ஜெயசுதாவுக்கு கொலை மிரட்டல்!… post thumbnail image
சென்னை:-தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு வருகிற 29–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே தலைவராக இருந்த நடிகர் முரளிமோகன் தற்போது போட்டியிடவில்லை. தெலுங்குதேசம் கட்சி சார்பில் அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதால் போட்டியில் இருந்து விலகி விட்டார். ஜெயசுதாவுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார். ராஜேந்திரபிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இரு அணியினரும் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் போட்டியில் இருந்து வாபஸ் பெறும்படி ஜெயசுதாவுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:–

நான் 43 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். ராஜேந்திரபிரசாத், முரளிமோகன் போன்றோர் வயதில் எனக்கு மூத்தவர்களாக இருக்கலாம். ஆனால் சினிமாவில் நான்தான் சீனியர். அவர்கள் வருவதற்கு முன்பே நடித்துக் கொண்டு இருக்கிறேன். தெலுங்கு நடிகர் சங்கத்தை உருவாக்கியதில் இருந்து அதில் உறுப்பினராக இருக்கிறேன். துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளேன். மற்றவர்கள் நிர்ப்பந்தத்தால் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன்.

எனக்கு மிரட்டல்கள் வருகிறது. போட்டியில் இருந்து விலகும்படி அரசியல்வாதிகள் மிரட்டுகிறார்கள். கொலை மிரட்டல்களுக்கு பயப்படமாட்டேன். மிரட்டலுக்கு பிறகு தேர்தலில் இன்னும் தீவிரமாகி விட்டேன். நலிந்த நடிகர்– நடிகைகளுக்கு உதவிகள் செய்யவும், அரசிடம் இருந்து சலுகைகள் பெற்றுத்தரவும்தான் தேர்தலில் நிற்கிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்.இவ்வாறு அவர் கூறினார். ராஜேந்திர பிரசாத் அணியினர் ஒவ்வொருவருக்கும் செல்போன்கள் வாங்கி கொடுத்து ஓட்டு கேட்பதாக ஜெயசுதா அணியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி