செய்திகள் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!…

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!…

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!… post thumbnail image
கொல்கத்தா:-டெல்லியிலிருந்து பேங்காக் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திடீர் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவருக்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து கிடைத்துள்ள தகவலின்படி, நேற்று, டெல்லியிலிருந்து பேங்காக் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் 10 பேர் கொண்ட குழுவுடன் வந்திருந்த முதியவர் ஒருவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால், கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக, கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவருடன் அந்த குழுவினரும் தங்க முடிவு செய்ததால் அவர்களை கொல்கத்தா விமான நிலையத்தில் விட்டுவிட்டு, விமானம் தனது பேங்காக் பயணத்தை தொடர்ந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி