செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…

பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…

பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!… post thumbnail image
புது டெல்லி:-சினிமா உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கலையுலகின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருது’க்கு இந்தி நடிகர் சசி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழம்பெரும் நடிகர் பிரிதிவிராஜ் கபூரின் மகனான சசி கபூர்(77), ஏராளமான இந்தி படங்களில் கதாநாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்ததுடன், சில படங்களை தயாரித்து, இயக்கியும் உள்ளார். மேலும் சில ஆங்கிலப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த ஆரம்பகால படங்களில் அவருக்கு நண்பராகவும், சகோதரராகவும் சசி கபூர் நடித்துள்ளார். எளிமையான இவரது வசன உச்சரிப்பு, குறும்புத்தனமான இவரது காதல் சேட்டை, சண்டை காட்சிகளில் இவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷமான முகபாவம் போன்றவை ஏராளமான ரசிகர் பட்டாளத்தை இவருக்கு ஏற்படுத்தி தந்தது.

பிலிம்பேர் விருதுகள், மத்திய அரசின் பத்மபூஷன் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ள இவரை 2014-ம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி