செய்திகள்,திரையுலகம் ‘அனேகன்’ திரைப்படம் குறித்து வெளிவந்த உண்மை!…

‘அனேகன்’ திரைப்படம் குறித்து வெளிவந்த உண்மை!…

‘அனேகன்’ திரைப்படம் குறித்து வெளிவந்த உண்மை!… post thumbnail image
சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படம் வெளியானதிலிருந்து தற்போது வரை அதை மாபெரும் வெற்றிப்படம் போல் ட்விட்டரில் செய்தியை பகிர்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். அனேகன் படம் 30 கோடி வசூலித்துள்ளது… 50 கோடி வசூலித்துள்ளது என்றெல்லாம் சகட்டுமேனிக்கு ட்விட் பண்ணி வருகிறார். தனுஷ் மட்டுமல்ல, ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸை வைத்துள்ள தனுஷுக்கு நெருக்கமாக உள்ள சிலரும் தனுஷின் ட்வீட்டை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, அதிகாரபூர்வ செய்தி போல் அவர்களும் அனேகன் படத்தின் வசூல் குறித்த மிகையான மற்றும் பொய்ச்செய்திகளை ட்வீட் பண்ணுகிறார்கள். இந்த வேலையைச் செய்வதற்காக தயாரிப்பாளரிடமிருந்து சில லட்சங்களை வாங்கி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறாராம் தனுஷ். அனேகன் படத்துக்கு மட்டுமல்ல ஏற்கனவே அவர் நடித்த ஷமிதாப் படத்துக்கு பாசிட்டிவ்வாக ட்வீட் பண்ணுவதற்காகவும் பால்கியிடமிருந்து சில லட்சங்களை வாங்கிக் கொடுத்தாராம் தனுஷ் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உண்மையில் இப்படம் இன்று வரை ரூ 66 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தனுஷே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் மொத்தமே ரூ 33 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். 20 கோடியில் படத்தை எடுத்துவிட்டு 35 கோடிக்கு பிசினஸ் செய்ய நினைத்ததால் அனேகன் படத்தை யாரும் வாங்கவில்லை. கடைசியில் கல்பாத்தி அகோரமே சொந்தமாக ரிலீஸ் செய்தார். 33 கோடி வசூலில் அவருக்குக் கிடைத்த ஷேர் சுமார் 13 கோடி. 7 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கவலையுடன் பகிர்ந்து கொண்டாராம் கல்பாத்தி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி