அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…

போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…

போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!… post thumbnail image
சியோல்:-வட கொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன்-ஐ சதிதிட்டம் திட்டம் மூலம் சி.ஐ.ஏ. கொல்வது போல் உருவாக்கப்பட்ட “தி இண்டர்வியூ’ திரைப்பத்தை வெளியிட அந்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. இத்திரைப்படத்தை தயாரித்த சோனி பிக்சர்ஸ் இணையதளத்தையும் வட கொரியா ஹேக் செய்தது. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தென் கொரியாவை சேர்ந்த சமூக ஆர்வலரான பார்க் சங் ஹக், ‘தி இண்டர்வியூ’ படத்தின் 10000 டி.வி.டி. க்களை வடகொரியாவில் பலூன் மூலம் விழச்செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

மேலும் அதே பலூன் மூலம் 5 லட்சம் துண்டுப்பிரசுங்களையும் வட கொரியாவில் வீசப்போவதாகவும் கூறியுள்ளார். தென் கொரியாவின் ‘சியோனான்’ போர் கப்பலை, வட கொரியா கடலில் மூழ்கடித்த 5 ஆவது ஆண்டு தினமான வரும் 26-ந் தேதி இந்த பலூனை பறக்க விடப்போவதாக ஹக் அறிவித்துள்ளது கொரிய தீபகற்பத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லைப்பகுதியில் உள்ள தென் கொரிய மக்களும் ஹக்கின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பலூனை பறக்கவிடுவதன் மூலம் தங்கள் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்த ஹக் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் எல்லையோர மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு தென்கொரியா கேட்டுக்கொண்டுள்ளது.

சாதாரணமாக போர் மூளும், அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கும் வட கொரியா, ஹக்கின் அறிவிப்பால் கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. பலூன் எல்லை தாண்டியால் உடனடியாக சுட்டு வீழ்த்தப்படும் என்று கூறியுள்ள அந்நாடு, இச்செயல் மூலம் தென் கொரியா தானாகவே போர் ஏற்பட வழிவகுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி திட்டமிட்டபடி பார்க் சங் ஹக் பலூனை பறக்க விடுவார்கள் என அவரது ஆதரவாளர்கள் கொக்கரிக்கின்றனர். இந்த பலூன் எங்கு, எப்போது பறக்கவிடப்படும் என்பது பற்றி ஹக் வாயை திறக்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கொரிய தீபகற்பம் தொடர்ந்து பதட்டத்துடனேயே காணப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி