அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!… post thumbnail image
புதுடெல்லி:-தியாகிகள் பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் உயிர் தியாகம் செய்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் நாட்டுக்காக, தங்கள் உயிரை அர்ப்பணித்த தேச பக்தர்கள் பகத்சிங், சுத்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேய போலீஸ் சூப்பிரண்டை கடந்த 1928–ம்ஆண்டு டிசம்பர் 17–ந்தேதி பகத்சிங், சுக்தவ், ராஜ்குரு ஆகிய 3 பேரும் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 1931–ம் ஆண்டு மார்ச் 23–ந்தேதி லாகூர் சிறையில் அவர்கள் 3 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி