செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!…

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!…

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!… post thumbnail image
’காக்கி சட்டை’ 25வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் சிவகார்த்திகேயன் லைவ் சாட் செய்த வேளையில் ட்விட்டரில் #ChatwithSK என சென்னை ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விகளும் , சிவகார்த்திகேயனின் சுவாரஸ்ய பதில்களும். சிவகார்த்திகேயன் ஆரம்பிக்கையில் ஈஸியான கேள்விகளாக கேட்கவும் நண்பர்களே என ட்வீட் செய்ய, எந்த கேள்வி கேட்டாலும் நீங்கள் ஈஸியாகத்தனே பதில் சொல்லபோகிறீர்கள் அண்ணா. என ரசிகர் ஒருவர் பதில் ட்வீட் கொடுக்க சாட் ஆரம்பமானது.

கேள்வி: இவ்வளவு போராட்டத்துலயும் எது உங்களை சோம்பல் இல்லாமல் வைத்திருக்கிறது?

பதில்: தியேட்டரில் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவு, எனக்கு நம்பிக்கையும், எப்படி நான் வேலை செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது.

கேள்வி: சமீப வருடங்களாகவே தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா என பி, சி வகுப்பு மக்களிடம் அதிகம் பேசப்படுவது நீங்கள் மட்டுமே ? என்ன செய்கிறீர்கள் அதற்கு?

பதில்: எனக்கு தெரிந்து பார்வையாளர்கள் என்னிடம் சிறப்பான இணைப்பில் உள்ளனர். பலரும் என்னை சகோதரனாக, நண்பனாக உணர்கீறார்கள். மேலும் காமெடியும் மற்றொரு காரணம்.

கேள்வி: ரஜினிமுருகன் படத்திற்கு பிறகு உங்களின் அடுத்த படம் என்ன?

பதில்: இன்னமும் நான் அது குறித்து முடிவு செய்யவில்லை.

கேள்வி: உங்களின் ‘‘காக்கி சட்டை’ மற்றும் ‘ எதிர் நீச்சல்’ படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் , இயக்குநர் துரைசெந்தில்குமார் குறித்து கூறுங்கள்?

பதில்: அவர் தான் என்னை மாற்றியவர். மேலும் திரையில் வித்யாசமான முயற்சிகளும் செய்ய வைத்தவர்.

கேள்வி: தனுஷ் படங்களில் உங்களுக்கு பிடித்த படம்

பதில்: புதுபேட்டை.

கேள்வி: மகேஷ் பாபு குறித்து உங்கள் பதில்? அவரது படங்களில் எந்த படம் உங்கள் ஃபேவரிட்?

பதில்: அவர் திரையில் வந்தாலே பிடிக்கும். அவரது வசன உச்சரிப்பு மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்தது மகிழ்ச்சி.

கேள்வி: கல்லூரி மாணவனாக நடிப்பீர்களா?

பதில்: கண்டிப்பாக , காத்திருக்கிறேன், அது வேடிக்கையாக இருக்கும்.

கேள்வி: பாண்டிராஜ் தான உங்களுக்கு கே.பி?

பதில்: தேசிய விருது பெற்ற இயக்குநர் . அவரது படத்தில் எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது பெருமை.

கேள்வி: அனிருத்திடம் உங்களுக்கு பிடித்தது?

பதில்: தன்னம்பிக்கை, பக்குவம், மற்றும் திறமை.

கேள்வி: ராஜமௌலி படத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?

பதில்: அவர் மிகவும் பெரிய மனிதர். கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்.

கேள்வி: விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? அவரது படங்களில் உங்களுக்கு பிடித்த படம்?

பதில்: எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை. அவரது படங்களில் பீட்சா எனக்கு பிடிக்கும்…

கேள்வி: அஜித்தை சந்தித்த தருணம் பற்றி?

பதில்: அவருடன் 5 மணி நேரம் பேசினேன். வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன்.

கேள்வி: விஜய்யை பற்றி உங்கள் கருத்து?

பதில்: அவர் Complete Entertainer … என்று கூறினார்.

மேலும் பலரின் கேள்விகளுக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்க ஆசைதான் .கண்டிப்பாக அடுத்த முறை பதிலளிக்கிறேன். #ChatwithSK என ட்ரெண்ட் செய்தமைக்கு மிக்க நன்றி. என ட்வீட் செய்துவிட்டு விடைபெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி