செய்திகள்,திரையுலகம் ஹரிக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!…

ஹரிக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!…

ஹரிக்காக நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு!… post thumbnail image
சென்னை:-அஞ்சான் தோல்விக்கு பிறகு நடிகர் சூர்யா படங்களை பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்திலும், விக்ரம் குமார் இயக்கத்தில் 24 என்கிற படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யாவுக்கு அவர் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய கமர்சியலான அம்சங்களுடன் வெளிவந்த படங்கள் சிங்கம், சிங்கம் 2. அவ்வப்போது சூர்யா ரசிகர்கள் சிங்கம் 3 எப்போது என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ஹரி சிங்கம் 3 படத்துக்கான விவாதத்தை துவக்கி உள்ளாராம். சூர்யா மாஸ், 24 படத்திற்கு பிறகு சிங்கம் 3க்கு ஓகே சொல்லி இருக்கிறார். இதில் அனிருத் இசையமைக்க உள்ளார் என்று சூர்யா தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி