செய்திகள்,திரையுலகம் ஐந்தாவது அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ்!…

ஐந்தாவது அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ்!…

ஐந்தாவது அவதாரம் எடுக்கும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-அனேகன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். தற்போது நேற்று முதல் வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் சில காட்சிகளை இயக்கியது போல், தனுஷ் இந்த புதிய படத்திலும் இயக்கப்போகிறாராம். அதாவது தான் நடிக்கும் காட்சிகளை வேல்ராஜ் இயக்க, மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை தனுஷ் இயக்கப்போவதாக கூறுப்படுகிறது. இதுவரை நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் என 4 அவதாரம் எடுத்த தனுஷ், ஐந்தாவதாக டைரக்டர் அவதாரத்தையும் விரைவில் எடுப்பார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி