செய்திகள் கொதிக்கும் எண்ணையில் தியானம் செய்யும் புத்த துறவி!…

கொதிக்கும் எண்ணையில் தியானம் செய்யும் புத்த துறவி!…

கொதிக்கும் எண்ணையில் தியானம் செய்யும் புத்த துறவி!… post thumbnail image
தாய்லாந்து:-கொதிக்கும் எண்ணெய் லேசாக மேலே பட்டாலே துடித்துப் போய்விடுவோம். ஆனால் ஒரு புத்த துறவியோ கொதிக்கும் எண்ணெயில் கூலாக அமர்ந்து தியானம் செய்கிறார். இந்த துறவியை அதிசயபிறவியாக கொண்டாடுகின்றனர். தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங்புவா. இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார்.

இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுகிறது. அவைகள் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது. இவர் தொடும் பொருட்களில் இவரின் சக்தி ஊடுருவதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயத்துக்கள் அல்லது துணி துண்டுகளை அவரிடம் கொடுத்து எடுத்து செல்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி