செய்திகள்,திரையுலகம் பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?…

பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?…

பிரபுதேவாவுடன் நடிக்க நடிகை நயன்தாரா மறுப்பு?… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய்யை வைத்து பிரபு தேவா இயக்கிய வில்லு படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். பிரபு தேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கும் மாறினார்.

சினிமாவுக்கும் முழுக்கு போட்டார். ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் திடீரென நின்று போனது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். தற்போது மீண்டும் நயன்தாரா நடிக்க வந்துள்ளார். தமிழ், மலையாளத்தில் நிறைய படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். பிரபு தேவா இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார். இருவரும் நேரில் சந்திப்பதை கூட தவிர்த்து வருகிறார்கள். காதலித்த போது பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். இப்போது ஒருவர் பங்கேற்கும் விழாவுக்கு மற்றவர் போவது இல்லை.

இந்நிலையில் பிரபு தேவா, நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைத்து தமிழ், தெலுங்கில் படம் எடுக்க தயாரிப்பாளர் ஒருவர் விரும்பினார். ஏற்கனவே காதலை முறித்துக் கொண்ட சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடிப்பதால் பிரபு தேவாவுடனும் நடிக்க சம்மதம் சொல்வார் என்று அந்த தயாரிப்பாளர் எதிர்பார்த்தார். நயன்தாராவை அணுகி கால்சீட் கேட்ட போது பிரபு தேவாவுடன் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி