அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்!…

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்!…

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாத கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கண்டனம்!… post thumbnail image
புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் சிசோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் மீது சுரேந்தர் ஷர்மா என்ற வழக்கறிஞர் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால், சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், மதியம் 2 மணிக்குள் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி