செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை!…

அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை!…

அமெரிக்காவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவை சேர்ந்த ரந்திர் கவுர்(34) என்ற பெண் பல் மருத்துவம் பயின்று வந்தார். இங்குள்ள சீக்கிய கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பே அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய ரந்திர் கவுரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டதாக சான் பிரான்சிஸ்கோ நகர போலீசார் நேற்று தெரிவித்தனர்.

ரந்திர் கவுர் பயன்படுத்திய பொருட்கள் அவர் பிணமாக கிடந்த வீட்டில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் கிடந்தது, போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. வீட்டில் கிடந்த அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இந்த கொலை தொடர்பான பின்னணி தகவல்களை அறிந்தவர்கள் தாமாக முன்வந்து போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி