செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யால் நடந்த ஆச்சரியம்!…

நடிகர் விஜய்யால் நடந்த ஆச்சரியம்!…

நடிகர் விஜய்யால் நடந்த ஆச்சரியம்!… post thumbnail image
சென்னை:-தற்போது நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அரங்குகள் அமைத்து முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தினர். படப்பிடிப்புக்காக தற்போது படக்குழு கேரளா சென்றுள்ளது. தற்போது அங்குள்ள எர்ணாகுளம் அருகே உள்ள மலையட்டூர் கிராமத்தில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

இந்த கிராமம் மலைப்பகுதியில் உள்ளது. அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து படப்பிடிப்பில் விஜய் பங்கேற்கிறார். அங்கு விஜய் தங்கியுள்ள தகவல் பக்கத்து கிராமங்களுக்கு பரவியது. இதையடுத்து அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். சமீப காலமாக விஜய் படங்கள் கேரளாவில் வெற்றிகரமாக ஒடி வசூல் குவிக்கின்றன. கேரளா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். எனவே தான் அவரை காண பெருங்கூட்டம் கூடியது.

ரசிகர்களை பார்த்து விஜய் கையசைத்தார். கும்பிடவும் செய்தார். அப்போது ரசிகர்கள் போட்டி போட்டு மொபைலில் அவரை படம் பிடித்தனர். ஒரு மலையாள நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு, விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மாஸ் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி