செய்திகள் இறந்துபோன உறவினருடன் செல்பி எடுத்த இலங்கை வாலிபர்!…

இறந்துபோன உறவினருடன் செல்பி எடுத்த இலங்கை வாலிபர்!…

இறந்துபோன உறவினருடன் செல்பி எடுத்த இலங்கை வாலிபர்!… post thumbnail image
கொழும்பு:-‘செல்பி’ மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் இதன் அடுத்தபடியாக இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் இலங்கையை சேர்ந்த வாலிபர். சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே ஓடும் ரெயில் முன் ‘செல்பி’ எடுக்க முயன்று கல்லூரி மாணவர்கள் இறந்து போனது நினைவிருக்கலாம்.

இதே போன்று உலகம் முழுவதும் ஆபத்தான ‘செல்பி’ எடுக்க முயன்று பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்நிலையில் இறந்து போன உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்ட இலங்கை வாலிபரின் எதிர்பார்ப்புக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்த படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

அதிகம் செல்பிகளை எடுத்து வெளியிடுவது அகந்தை அல்லது தாழ்வு மனப்பான்மையையின் வெளிப்பாடு என்று உளவியல் நிபுணர்கள் கூறினாலும் ஒபாமா, மோடி, சச்சின் என அனைவரும் செல்பிகளை எடுத்து தள்ளிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி