செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…

இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!…

இந்தியாவில் 3வது தொழிற்சாலையை நிறுவுகிறது சாம்சங்!… post thumbnail image
புதுடெல்லி:-எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் பிரபல தென்கொரிய நிறுவனம் ‘சாம்சங்’. இந்தியாவில் மொபைல் போன்கள் விற்பனையில் குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவி்ல் காலூன்றியிருக்கும் ‘சாம்சங்’ ஏற்கனவே, தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் நோய்டாவில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது. சுமார் 45 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் இந்த நிறுவனம் 3-வதாக புதிய தொழிற்சாலையை நிறுவ ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான நிலத்தை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநில அரசுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி, சாம்சங் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவை ஒரு முக்கியமான சந்தை வாய்ப்புள்ள நாடாக நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் மாபெரும் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸில் முன்னணியில் இருப்பதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஆதரவளிக்க சாம்சங் தயாராக இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மொபைல் தயாரிப்பு பிரிவு தலைவர் ஜே.கே.சின் இதைப்பற்றி ஆலோசிப்பதற்காக அண்மையில் இந்தியாவுக்கு வந்ததிருந்தார். தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஸ்மார்ட்போன்களில் 90 சதவீதம் அளவுக்கு உள்நாட்டிலேயே விற்பனை செய்து வருகிறோம்.

புதிய தொழிற்சாலை அமைக்க நிலத்தை பெறுவதற்கு உத்தரபிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனினும், எங்களுக்கு தேவைப்படும் நிலத்தின் அளவை பொறுத்து விதிமுறைகளின்படி 500 மில்லியன் டாலரிலிருந்து 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என தெரிவித்தார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நல்ல லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனம் மேலும் ஒரு தொழிற்சாலையை இந்தியாவில் நிறுவினால், குறைவான செலவில் அதிக உற்பத்தியை வழங்க முடியும் என தொழில் வல்லுனர்களும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி