செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு விராட்கோலி மீது ஐ.சி.சி.யிடம் புகார்!…

விராட்கோலி மீது ஐ.சி.சி.யிடம் புகார்!…

விராட்கோலி மீது ஐ.சி.சி.யிடம் புகார்!… post thumbnail image
பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துணைகேப்டன் விராட்கோலி நேற்று முன்தினம் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீரர்கள் அறைக்கு திரும்புகையில், அங்கு நின்று கொண்டிருந்த ஆங்கில பத்திரிகை நிருபரை நோக்கி தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டி தீர்த்தார்.

தன்னையும், தனது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து செய்தி வெளியிட்ட நிருபர் அவர் தான் என்று நினைத்து திட்டியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் வேறு நிருபர் என்று தெரிந்ததும் விராட்கோலி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் விராட்கோலி பொது இடத்தில் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் குறித்து அந்த பத்திரிகை சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அத்துடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோலி விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளர் அனுராக் தாகூர் கருத்து தெரிவிக்கையில், இந்த பிரச்சினை குறித்து விராட்கோலி விளக்கம் அளித்துவிட்டார். உலக கோப்பை போட்டி இந்திய அணிக்கு முக்கியமானதாகும். தவறான புரிந்து கொள்ளுதலால் நடந்த இந்த சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு உலக கோப்பையில் இந்திய அணி கவனம் செலுத்துவது அவசியமானதாகும். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதற்கிடையில் விராட்கோலி, நிருபரை தகாத வார்த்தைகளால் திட்டவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் மறுத்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி