செய்திகள்,திரையுலகம் மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…

மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!…

மீண்டும் மும்பையில் முகாமிடும் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தற்போது இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. மே 1ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை அடுத்து தமிழில் ‘யாவரும் நலம்’, தெலுங்கில் ‘மனம்’ ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கவுள்ளனர். மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களிலும் மற்றும் லோக்கல் ஏரியாக்களிலும் படத்தின் பெரும் பகுதியை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் அறிவியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாக இருக்கிறது. சூர்யா ஏற்கனவே ‘7ம் அறிவு’ என்ற அறிவியல் சார்ந்த படத்தில் நடித்திருந்தார். அஞ்சான் படத்தின் பெரும்பகுதி மும்பையை மையமாக வைத்து படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி