அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதை தொடர்ந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் தகவல் பரிமாற்றம் செய்ய இயலவில்லை. அதை தொடர்ந்து டுவிட்டர் இணைய தள நிறுவனர் ஜேக் டோர்சிக்கும், அதன் ஊழியர்களுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எங்கள் மீது இது போன்று மறைமுக போரை தொடுத்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் உங்கள் மீது உண்மையான போரை தொடுக்க வேண்டியது வரும்.
டோர்சியும் அவரது ஊழியர்களும் எங்களது வீரர்கள் (தீவிரவாதிகள்) மற்றும் ஆதரவாளர்கள் மீதும் மறைமுகமாக குறி வைத்துள்ளீர்கள். உங்களின் இந்த போர் தோல்வி அடையும். டுவிட்டரில் எங்கள் கணக்குகளை முடக்கினாலும் நாங்கள் மீண்டும் வருவோம். எங்கள் சிங்கங்கள் வெளியே வந்து உங்கள் மூச்சை (உயிரை) நிறுத்தும். அதன் பின்னர் நீங்கள் ஒரு போதும் உயிர் வாழ முடியாது என தெரிவித்துள்ளனர். அரபு மொழியில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி