செய்திகள்,விளையாட்டு சிறுமியுடன் பாலியல் உறவு: பிரபல கால்பந்து வீரர் கைது!…

சிறுமியுடன் பாலியல் உறவு: பிரபல கால்பந்து வீரர் கைது!…

சிறுமியுடன் பாலியல் உறவு: பிரபல கால்பந்து வீரர் கைது!… post thumbnail image
லண்டன:-இங்கிலாந்து கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஆடம் ஜான்சன். சண்டர்லேண்ட் அணிக்காக 10 மில்லியன் பவுண்டுக்கு (ரூ.95 கோடி) 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆடம் தற்போது, இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் சந்தர்லேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்தின் டர்கம் கவுண்டியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சனை சஸ்பெண்ட் செய்வதாக சந்தர்லேண்ட் அணி அறிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணிக்காக 12 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஜான்சனுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்து பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை அவரது குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடம் குற்றமற்றவர் என்றும் வழக்கில் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் அவரது தாயாரும், மனைவியும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி