செய்திகள்,விளையாட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸை 102 ரன்னில் சுருட்டியது இந்தியா!…

ஐக்கிய அரபு எமிரேட்ஸை 102 ரன்னில் சுருட்டியது இந்தியா!…

ஐக்கிய அரபு எமிரேட்ஸை 102 ரன்னில் சுருட்டியது இந்தியா!… post thumbnail image
பெர்த்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 21–வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள உள்ள இந்தியா– ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. தொடக்க வீரர்கள் அம்ஜத் அலி, பெரேஞ்சர், கிருஷ்ணா சந்திரன் ஆகியோர் தலா 4 ரன்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள்.

அடுத்து வந்த குர்ரம் கான் 14 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து 5-வது நபராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் பட்டீல் 7 ரன்னில் நடையை கட்டினார். இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 14.5 ஓவரில் 41 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. அதன்பின் அன்வர் களம் இறங்கினார். இவர் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். அவருக்கு யாரும் துணையாக நின்று விளையாடாததால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 71 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டை இழந்தது தத்தளித்தது.

கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய குருஜி ஓரளவு தாக்குப்பிடித்து 10 ரன்கள் எடுத்தார். இவரை துணையாக வைத்து விளையாடிய அன்வர் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அத்துடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன்னிங்சும் முடிவுக்கு வந்தது. அந்த அணி 31.3 ஓவரில் 102 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 10 ஓவரில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி