செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!…

அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!…

அரசு அலுவலகங்களில் ஜிமெயிலுக்கு தடை!… post thumbnail image
புதுடெல்லி:-மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் பிரைவேட் ஈ-மெயில் வசதிகளான ஜிமெயில், யாஹூ-வை பயன்படுத்த அதிகாரபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி பயன்படுத்தினால் இண்டர்நெட் ஹிஸ்டரியை ரெக்கவர் செய்து ஈ-மெயில்களை டெலிட் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதாவது, இந்திய அரசுக்கான ஈ-மெயில் பாலிசியும், தகவல் தொழில்நுட்ப வசதியை இந்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் விதிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதில், கூகுள், யாஹூ-வை பயன்படுத்தக்கூடாது என்றும், அரசு அலுவலங்களில் அதிகாரபூர்வ பணிகளுக்கு இந்திய அரசு பரிந்துரைத்துள்ள NIC மின்னஞ்சல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். வெளிநாட்டு சர்வர்களான கூகுள், யாஹூவை பயன்படுத்துவதால் அமெரிக்க உளவு நிறுவனங்கள் ரகசிய தகவல்களை திருடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி