செய்திகள்,திரையுலகம் சென்னையில் வீடு வாங்க விரும்பாத நடிகை நயன்தாரா!…

சென்னையில் வீடு வாங்க விரும்பாத நடிகை நயன்தாரா!…

சென்னையில் வீடு வாங்க விரும்பாத நடிகை நயன்தாரா!… post thumbnail image
சென்னை:-நடிகை நயன்தாரா தெலுங்கில் பிஸியாக இருந்த காலத்தில் ஐதராபாத்தில் இரண்டு வீடுகளை வாங்கிப்போட்டிருந்தார். தெலுங்கில் இப்போது படம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒய்வு நாட்களில் அவர் தங்குவது அங்கேதான். தவிர இன்னும் சில பண்டிகை, குடும்ப விஷேசங்களில் கலந்துகொள்வதற்காக அவ்வப்போது தனது சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று தனது குடும்பத்தினருடன் தங்குகிறார். அவரது பெற்றோர்களும் சொந்த ஊரில் உள்ள பணிகள் காரணமாக கேரளாவிலேயே செட்டில் ஆகிவிட்டனர்.

தமிழில் தற்போது இடைவிடாமல் பல படங்களில் நடித்துவருகிறார் நயன்தாரா. ஆனாலும் சென்னையை பொறுத்தவரை நயன்தாராவுக்கு சொந்தமாக வீடு வாங்கும் எண்ணம் துளியும் இல்லையாம். ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது ஹோட்டலிலேயே தங்கிக்கொள்கிறார். அவர் வந்துசெல்லும் வரை உள்ள வசதிகளை தயாரிப்பு நிறுவனமே செய்துவிடுவதால் அவருக்கு ஹோட்டலில் தங்குவதே சௌகர்யமாக இருக்கிறதாம். ஷூட்டிங் முடிந்ததும் ஹைதராபத்துக்கோ அல்லது கேரளாவுக்கோ ப்ளைட் ஏறிவிடுகிறார். அவரது நெருங்கிய நண்பர்களோ இதுதான் நயன்தாராவின் லைப்ஸ்டைல் என்கிறார்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி