செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை!…

ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை!…

ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை!… post thumbnail image
புதுடெல்லி:-ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவிலும் பிரசாரம் நடந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக அந்த இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் யாராவது ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி