செய்திகள்,திரையுலகம் திருமண நாளையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினி!…

திருமண நாளையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினி!…

திருமண நாளையொட்டி ரசிகர்களை சந்தித்த ரஜினி!… post thumbnail image
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு இன்று 34வது திருமண நாள் ஆகும். ரஜினி தனது மனைவி லதா ரஜினியுடன் இந்த திருமண நாளை கொண்டாடினார். திரையுலகினர் மற்றும் உறவினர்கள் நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்தனர். திருமண நாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்னால் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினார்கள். வெளியூரில் இருந்து கார், வேன்களிலும் ரசிகர்கள் வந்து இருந்தனர்.

ரசிகர்கள் கூட்டம் நிரம்பியதால் உடனடியாக அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தினரை அவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். காலை 10.45 மணிக்கு ரஜினி திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்தார். கூடி நின்ற ரசிகர்களை பார்த்து கையசைத்தார். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும் செய்தார். ரஜினியை கண்டதும் ரசிகர்கள் உற்சாகம் மிகுதியால் ஆரவாரம் செய்தனர். வாழ்த்து கோஷம் போட்டார்கள். திருமண நாளுக்காகவும் வாழ்த்து தெரிவித்தார்கள். அதனை ரஜினி சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டார். மூன்று நிமிடம் ரசிகர்களை நோக்கி கையசைத்தபடியே நின்றார். அதன் பிறகு வீட்டுக்குள் சென்றார். ரசிகர்கள் கோவில்களில் ரஜினி–லதா பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதங்கள் கொண்டு வந்து இருந்தனர். அந்த பிரசாதங்களை லதா ரஜினி பெற்றுக் கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி