செய்திகள்,திரையுலகம் ’என்னை அறித்தால்’ பட வசூல் ரூ.100 கோடி தாண்டியது!…

’என்னை அறித்தால்’ பட வசூல் ரூ.100 கோடி தாண்டியது!…

’என்னை அறித்தால்’ பட வசூல் ரூ.100 கோடி தாண்டியது!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் பிப்ரவரி 5ம் தேதி வெளியானது. 3 வாரங்களில் என்னை அறிந்தால் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ. 100 கோடியை தாண்டி உள்ளது. 3 வார முடிவில் என்னை அறிந்தால் ரூ.102 கோடி வசூலை தொட்டு உள்ளது. உலக அளவில் என்னை அறிந்தால் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்திய அளவில் என்னை அறிந்தால் ரூ. 73.50 கோடி வசூல் செய்து உள்ளது. வெளிநாடுகளில் ரூ.28 கோடி வசூல் செய்து உள்ளது.தமிழ் நாட்டில் மட்டும் ரூ.60.5 கோடி வசூல் செய்து உள்ளது. கர்நாடகாவில் ரூ.6. 3 கோடியும்,கேரளாவில் ரூ.5.30 கோடியும் வசூல் செய்து உள்ளது. என்னை அறிந்தால் படத்திற்கு அமெரிக்கா , இங்கிலாந்து நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது. சென்னை பாக்ஸ் ஆபீசில் ரூ.5.75 கோசூல் செய்து இருந்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி