அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்!…

அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்!…

அமித்ஷா தலைமையில் மாநில பா.ஜனதா தலைவர்கள் கூட்டம்!… post thumbnail image
புதுடெல்லி:-அனைத்து மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்கள், பொறுப்பாளர்கள், அமைப்பு பொதுச்செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்ட உறுப்பினர் சேர்க்கை பற்றியும், உறுப்பினர் சேர்க்கைக்கு கையாளப்பட்ட உத்திகள், உறுப்பினர் சேர்க்கை திட்டத்தில் மேலும் எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டம் முடிந்த பின் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. மிகவும் வேகமாகவும், தீவிரமாகவும் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்த முதல் பத்து மாநிலங்களுக்குள் தமிழகம் வரும் வாய்ப்பு வெகு விரைவில் எங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து எங்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள், அவற்றை திறம்பட முடித்த விதம் ஆகியவை பாராட்டும் படியாகவே இருந்தது என்பதை எங்கள் தேசிய தலைவர் உணர்ந்து கொண்டது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.

நாங்கள் மேலும் கடுமையாக பணியாற்றி எங்கள் இலக்கை எட்டுவோம். எங்கள் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற மார்ச் 5ம் தேதி தமிழகத்துக்கு வரும்போது 600 மண்டல தலைவர்களை சந்திக்கிறார். தனி கவனம் எடுத்து உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு அவர் பாராட்டு பத்திரம் வழங்கப்போகிறார். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி