செய்திகள் திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…

திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!…

திருமணமான காதலிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த என்ஜினீயர்!… post thumbnail image
சென்னை:-சென்னை அபிராமபுரம் வல்லீஸ்வரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ஜினீயரான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் படித்தபோது பாலவாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (23) என்ற வாலிபர் மகேஸ்வரியை காதலித்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் மகேஸ்வரிக்கு திருமணமான பின்னரும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுபற்றி அபிராமபுரம் போலீசில் ஏற்கனவே புகார் செய்யப்பட்டுள்ளது. அப்போது இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி சாந்தகுமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மகேஸ்வரி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இருப்பினும் சாந்தகுமார் அவரை போனில் தொடர்பு கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மகேஸ்வரி தனது அக்காள் யோகேஸ்வரியிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரும் சாந்தகுமாரை போனில் எச்சரித்துள்ளார். அப்போது அவர், யோகேஸ்வரியிடமும் அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி இருக்கிறார். இதுபற்றி யோகேஸ்வரி அபிராமபுரம் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சாந்தகுமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் வீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி