செய்திகள்,முதன்மை செய்திகள் ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!…

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!…

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு – 40 பேர் உயிரிழப்பு!… post thumbnail image
பாக்தாத்:-பாக்தாத்தின் தென்கிழக்கில் உள்ள தியாலா புறநகர் பகுதியில் நேற்று மாலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டபோது அப்பகுதியில் கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்புகளில் 25 பேர் உயிரிழந்தனர் என்று மருத்துவமனை மற்றும் போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. காயம் அடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டு வெடிப்புகளில் பள்ளி மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே பள்ளி உள்ளது. குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே வந்தபோது வெடிகுண்டுகள் வெடித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு எந்தஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. நாட்டில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் சித்திக் இஸ்லாமிய பிரிவினர் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மிஷாதா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் வெடிகுண்டு வெடித்தது. இந்தில் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்தாத்தின் வடமேற்காக உள்ள சுலா பகுதியிலும் வெடிகுண்டு வெடித்தது. இதில் 3 பேர் உயிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் மக்களை குறிவைத்து நடத்தப்பட்டது. நேற்று மட்டும் ஈராக்கில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தோர் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி