அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…

அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!…

அன்னாஹசாரேயின் 2 நாள் போராட்டம் தொடங்கியது!… post thumbnail image
புதுடெல்லி:-நிலம் கையகப்படுத்துவதை வரைமுறைப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு 77 வயது சமூக ஆர்வலரான அன்னாஹசாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2நாள் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்தார். அன்னாஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த அன்னாஹசாரே நேற்று டெல்லி சென்றார். திட்ட மிட்டப்படி அவரும், அவரது ஆதரவாளர்களும் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டத்தை தொடங்கினார்கள்.

இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டனர். ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த போராட்டம் நாளை வரை நடைபெற உள்ளது. ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதை வரவேற்றுள்ள அன்னாஹசாரே இது பற்றி கூறுகையில், ராகுலும், கெஜ்ரிவாலும் வரட்டும். ஆனால் அவர்கள் மேடை ஏற அனுமதிக்க மாட்டோம். தொண்டர்களோடு தொண்டர்களாக அமரலாம் என்றார்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் 2 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று அன்னாஹசாரே வற்புறுத்தி வருகிறார். டெல்லி போராட்டத்தில் நியாயம் கிடைக்காவிட்டால் அடுத்தக் கட்டமாக நாடு முழுவதும் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அன்னாஹசாரே கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி