செய்திகள் 29 பெண்களை கற்பழித்த வாலிபருக்கு 1535 ஆண்டு ஜெயில்!…

29 பெண்களை கற்பழித்த வாலிபருக்கு 1535 ஆண்டு ஜெயில்!…

29 பெண்களை கற்பழித்த வாலிபருக்கு 1535 ஆண்டு ஜெயில்!… post thumbnail image
ஜோகன்ஸ்பர்க்:-தென் ஆப்பிரிக்காவின் கவுடெங் மாகாணத்தில் உள்ள டெம்பிகா பகுதியை சேர்ந்தவன் ஆல்பர்ட் மொராக் (35). இவன் பல கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். மேலும் பல பெண்களை கடத்தி சென்று கற்பழித்தான். கடந்த 2007ம் ஆண்டு முதல் இவனை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவன் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தான்.

இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினான். அவனிடம் விசாரித்த போது 29 பெண்களை கற்பழித்தது தெரிய வந்தது. மேலும் பல நூறு கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டிருந்தான். எனவே அவனை கைது செய்த போலீசார் ஜோகன்ஸ்பர்க் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரியான் ஸ்டிரைமோம் குற்றம் சாட்டப்பட்ட ஆல்பர்ட் மொராக்குக்கு 1535 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவற்றில் கற்பழிப்பு குற்றங்களுக்கு 30 ஆயுள் தண்டனையும், கொலை, கொள்ளை, வழிப்பறிக்கு 360 ஆண்டு தண்டனையும் அடங்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி