அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…

நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்…

நடைபயிற்சியின்போது குறைகளை கேட்ட கெஜ்ரிவால்… post thumbnail image
புதுடெல்லி:- டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது. 14–ந்தேதி கெஜ்ரிவால் முதல்–அமைச்சராக பதவி ஏற்றார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வந்தார். என்றாலும் தலைமைச் செயலகம் சென்றார்.

அங்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் உத்தரபிரதேச மாநிலம் கவுசாம்பியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

நேற்று கெஜ்ரிவால், தனது குடியிருப்பு பகுதிகளில் மனைவியுடன் நடைபயிற்சி செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்களிடம் பேசினார்.

போலீஸ் பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகள் இல்லாமல் அவர் பொதுமக்களை சந்தித்ததால் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நடைபயிற்சியின்போது அவர் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டு அறிந்தார்.

இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது எளிமை பற்றியும் பேசிக்கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி