செய்திகள் ராணுவ தளத்தை கைப்பற்றிய அல்–கொய்தா தீவிரவாதிகள்…

ராணுவ தளத்தை கைப்பற்றிய அல்–கொய்தா தீவிரவாதிகள்…

ராணுவ தளத்தை கைப்பற்றிய அல்–கொய்தா தீவிரவாதிகள்… post thumbnail image
சனா :- ஏமனில் ஈரானை சேர்ந்த ஷிபா பிரிவை சேர்ந்த ஹீதீவ் கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டு போர் மூலம் வடக்கு பகுதியை பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் ஏமனின் தெற்கு பகுதியில் அல்– கொய்தா தீவிரவாதிகளும் அதன் தோழமை அமைப்பான அன்சர் அல்–ஷிரியா தீவிரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

தெற்கு பகுதியில் உள்ள ஷப்வா மாகாணத்தில் ராணுவ தளம் உள்ளது. நேற்று அங்கு அன்சர் அல்–ஷிரியா தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அதிரடியாக புகுந்தனர்.

பின்னர் அங்கு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவமும் தாக்கியது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. முடிவில் ஷப்வா ராணுவதளத்தை அல்–கொய்தா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

மேலும் அங்கிருந்த 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கிடையே ஹீதீவ் கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை தெற்கு ஏமனிலும் நிலைநாட்ட தொடங்கியுள்ளனர். அங்கு தற்கொலை தாக்குதல், கார் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி